Saturday, June 25, 2011

உதயன் - திரைப்பட விமர்சனம் 24-06-2011

இந்த படத்தின் விமர்சன பதிவை படிக்கும் முன்பு இதனைப்பற்றிய அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய நம்முடைய முன்னோட்ட பதிவை ஒரு முறை பார்க்கவும்.பிறகு இந்த பதிவை புரிவது சுலபமாகிவிடும். குறிப்பாக படத்தின் பின்னணி மற்றும் எதிர்ப்பார்ப்பு பற்றி தெரிந்து கொள்ள இலகுவாக இருக்கும்.

கொஞ்ச நாளாக இருந்த தேக்க நிலை மாறி, இந்த வாரம் மூன்று புத்தம் புதிய தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகின்றது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் மூன்று படங்களுமே அறிமுக இயக்குனர்களால் இயக்கப்பட்டவை எனபதே. இன்று ரிலீஸ் ஆகிய பிள்ளையார் தெரு கடைசி வீடு படமும், உதயன் படமும் வெளியான அனைத்து இடங்களிலுமே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் அருள்நிதி 'நடிப்பில்' வெளிவந்த உதயன் படத்தினை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

உதயன் - படத்தின் கதை: சென்னையில் ஒரு தனியார் வங்கியில் பணிபுரியும் அருள்நிதி (வசந்த்), எதேச்சையாக ஒருநாள் ப்ரனீதாவை சந்தித்து உடனடியாக திருமணம் பற்றி பேசி, அவரை காதலிக்க ஆரம்பிக்கிறார். பின்னர் தோழியின் வங்கி கடனுக்காக ப்ரியாவும் வசந்திடம் வந்து உதவி கேட்க, மோதலில் ஆரம்பித்தது சிறிய ஊடல்களுக்கிடையே காதலாக மாறுகிறது. ப்ரியாவின் தந்தை ஒரு பெரிய சக்தியின் ஆடிட்டராக பணிபுரிபவர். இந்த காதலை இவர் எதிர்க்க, வசனத்தை மிரட்ட வரும் அந்த பெரிய தாதாவின் தம்பி வசந்த்தை கண்டவுடன் மிரண்டு போய், வசந்த்தை கத்தியால் குத்திவிட, அப்போது எங்கே வந்து அவனை கொன்றுவிடுகிறார் ஆஷிஷ் வித்யார்த்தி. அவரை பார்த்தவுடன் வசந்த் "அப்பா" என்று கூறியபடி சரிய, இடைவேளை ஆரம்பிக்கிறது. வசந்த் யார்? அவனுக்கும் அந்த பெரிய சக்திக்கும் என்ன பிரச்சினை? எதற்க்காக வசந்தின் அப்பா அவர்களை தேடி வருகிறார்? இந்த காதல் ஜோடிகள் கை கோர்த்தார்களா? என்பதை உண்மையிலே தைரியம் இருந்தால் வெள்ளி திரையில் காண்க.

அருள்நிதி: சில பேர் நேரில் பார்க்க அழகாக இருப்பார்கள்; ஆனால் போட்டோவில் அவர்களை காண சகிக்காது. அதே சமயம் சிலர் போட்டோவில் நன்றாக இருப்பார்கள், ஆனால் நேரில் பார்த்தல் அவர இவர்? என்று வினவும்படி இருப்பார்கள். நம்ம ஹீரோ அருள்நிதி போட்டோக்களில் பார்க்கையில் ஹான்ட்சம் ஆகவே இருக்கிறார். ஆனால் படத்தில் பார்க்கையில் ஒருவிதமான (கஷ்டப்படுகிற) உடல்மொழியுடனே (பாடி லாங்குவேஜ்) இருப்பதை உணர முடிகிறது. உதாரணமாக அவரது கைகளை எப்படி பொசிஷனில் வைப்பது என்பதே அவருக்கு இன்னமும் கைவராத கலை. அதன் பின்னர் அவரது குரல். ஜித்தன் ரமேஷைவிட ஜீரணிக்க கடினமாக இருக்கும் ஹீரோவின் குரல் யாருடையது என்றால், வெகு சுலபமாக அருள்நிதியின் குரலே என்று சொல்லிவிடலாம். கண்டிப்பாக ஒரு டப்பிங் குரல் இவருக்கு தேவை. அதே போல இவருடைய உடல் அமைப்பே படங்களில் ஒருவிதமாக Ungainly ஆக இருக்கிறது. ஆனால் போட்டோக்களில் பார்க்கையில் உயரமான பில்லா அஜித்தை போல ஸ்மார்ட் ஆக இருக்கிறார்.

ஆரம்ப காலங்களில் அமிதாப் பச்ச்னைப்பற்றி கூறுகையில் "He’s got 2 Left Shoes" என்று கூறுவார்கள். அதாவது அவருக்கு நடனம் ஆட வராது என்பதையே அப்படி கிண்டலாக சொல்லி வந்தார்கள். பின்னர் அவர் படிப்படியாக முன்னேறி இப்போது தனக்கென ஒரு தனி பாணியை வகுத்துக்கொண்டு ஒரு அட்டகாசமான நடனம் புரிபவராக மாறிவிட்டார். ஆனால் அருள்நிதி இப்போதும் 2 Left shoes உடனே இருக்கிறார். கண்டிப்பாக இவருக்கு ஒரு நடன பயிற்சியாளர் தேவை. அதே சமயம் முகத்தில் ஒரு Dead-Pan expression எப்போதும் இருக்கிறது. யாராவது வந்து ஒரு சோகமான செய்தியை சொன்னால் கூட " என்ன, இன்னைக்கு வெள்ளிகிழமையா?" என்று விசாரிப்பதைப்போலவே அவரது முகபாவனைகள் உள்ளன.

என்னடா இவன் தொடர்ந்து ஒரே நெகடிவ் விஷயங்களையே சொல்கிறான் என்று யோசிக்காதீர்கள். அருள்நிதியிடம் ஹீரோக்களுக்கான பல நல்ல குணாதிசயங்கள் உள்ளன. அவரது உயரம் ஒரு மிகப்பெரிய பிளஸ் பாயின்ட். சண்டை காட்சிகளில் அனாயசமாக ஐந்து பேரை அடிக்கிறார் (ஆரம்ப கால -திமிரு பட-விஷால் போல). ஸ்மார்ட் ஆக தெரிகிறார். ஒரு நல்ல ஆளுமை இவரிடம் இருக்கிறது. கொஞ்சம் ஹோம்வர்க் செய்தால் கண்டிப்பாக ஒரு பெரிய ரவுண்ட் வருவார்.

பிரனீதா: இந்த படம் பார்க்க சென்றதின் முதல் நோக்கமே இவரை மறுபடியும் திரையில் பார்க்கவேண்டும் என்றா ஆசைதான். சென்ற தீபாவளிக்கு பிறகு ரிலீஸ் ஆன பாவா என்கிற தெலுகு படத்தில்தான் இந்த அழகியை நான் முதலில் பார்த்தேன். நல்ல முகபாவங்கள், நேர்த்தியான முகம், ஒல்லியான உடல்வாகு என்று செம கியூட்டாக தெரிந்தார் இவர். ஒரு துறுதுறுப்பான கல்லூரி பெண் பாத்திரத்தில் நன்றாக நடித்து இருந்தார். ஆகையால் இந்த படத்தில் இவரை பார்க்கவே சென்றேன். இந்த படத்தில் இவரை பார்க்கையில் நடிப்புக்கும் இவருக்கும் கொஞ்சம் தூரம் என்றே தோன்றுகிறது. ஒல்லியான பெண்கள் தமிழில் நிலைப்பது அரிதே. ஆனால் இவர் திறமையான ஒரு நடிகை. அதே சமயம் 'தெறம' காட்டும் நடிகையும் கூட. பார்க்கலாம்.

சந்தானத்தின் இரட்டை அர்த்தம் நேரிடையான அர்த்தம் கொண்ட காமெடியும், இரண்டு இளமை ததும்பும் பாடல்களும் இல்லை என்றால் தியேட்டரில் இருந்து மனம் நொந்து வந்திருப்பேன். இடைவேளைக்கு பிறகு எதாவது வித்தியாசமாக இருக்கும் என்றால், இதுவரை இரண்டாயிரம் தடவை தெலுகு படங்களில் வந்துள்ள அதே பழிவாங்கும் கதை தான். ஆனால் வில்லனுக்கும் உதயனுக்கும் சண்டை ஏற்படும் காட்சியில் நியாயம் என்னவோ வில்லன் பக்கமே இருக்கிறது. பின்னே என்னங்க, வில்லன் காரில் வந்துக்கொண்டு இருக்கும்போது உதயன் அவரின் காருக்கு முன்னே செல் போனில் பேசிக்கொண்டே வழிவிடாமல் தொடர்ந்து இருசக்கர வாகனத்தை ஒட்டிக்கொண்டு செல்கிறார். ஒரு கட்டத்திற்கு பிறகு கடுப்பாகும் வில்லன் அவரின் வண்டியை ஒரு தட்டு தட்ட, உதயன் கீழே சேற்றில் விழுந்து விடுகிறார். அப்போதும்கூட வில்லன் நல்லதொரு அறிவுரையை மட்டுமே கூறுகிறார் (வண்டி ஓட்டும்போது செல் போனில் பேசவேண்டாம், கூப்பிடுவது எமனாக கூட இருக்கலாம்). ஆனால் உதயன் அவரை துரத்தி சென்று அடித்து, சட்டையை கழட்டி ஊரெல்லாம் நடத்தி சென்று அவமானப்படுத்துகிறார். பின்னர் இவர்களுக்குள் பகை ஆரம்பிக்கிறது. இதில் உதயன் செய்ததே தப்பு என்று படுகிறது.

படத்தின் + கள்:
சந்தானம் + காமெடி
புதிய ஹீரோயின்
இரண்டு பாடல்கள்
சற்றே புத்திசாலித்தனமான வசனங்கள்
இடைவேளை ட்விஸ்ட்
கிளைமேக்ஸ் சண்டையில் திருப்பம்


படத்தின் - கள்:
நடிப்பு ?
மிகவும் பழக்கப்பட்ட திரைக்கதை, யூகிக்ககூடிய காட்சிகள்
இங்கே பாடல் வரும் என்று தெளிவாக அறியும் காட்சியமைப்பு
வித்தியாசம் இல்லாத காட்சிகள், கதையமைப்பு
இசை

இவ்வளவு எதுக்குங்க பாஸ், இரண்டு அருள்நிதி பாத்திரங்களுக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் என்ன தெரியுமா? ஒருவர் விபூதி வைத்து இருப்பார், இன்னொருவர் வாயில் பீடா போட்டுக்கொண்டே இருப்பார். இதுக்கு மேல என்னங்க வேண்டும் உங்களுக்கு? எம்ஜியார் ஒரு மரு வச்சா, அது மாறுவேஷம் எண்ணும்போது, இந்த வித்தியாசம் போதாதா?

தமிழ் சினிமா உலகின் பரிந்துரை: single bullet 1/6 (ஒரே ஒரு தோட்டா).

கிங்'ஸ் பன்ச்: உதயன் - அஸ்தமனம் ஆகிவிட்டான்.

4 comments:

Lucky Limat - லக்கி லிமட் said...

வந்தோம்ல பஸ்ட்

Cars 2 3D - கார்ஸ் இரண்டாம் பாகம்

Lucky Limat - லக்கி லிமட் said...

இந்த விமர்சனம் எதிபார்த்தது தான் விஸ்வா

பிரசன்னா கண்ணன் said...

//அவரது குரல். ஜித்தன் ரமேஷைவிட ஜீரணிக்க கடினமாக இருக்கும்
முந்தி, நடிகர் ஜீவன (நான் அவன் இல்லை) நாங்க அப்பாஸ் அளவுக்கு கூட நடிக்க மாட்டேன்குறான்னு கிண்டல் பண்ணுவோம்..

SURESH said...

ஒரு சோகமான செய்தியை சொன்னால் கூட " என்ன, இன்னைக்கு வெள்ளிகிழமையா?" என்று விசாரிப்பதைப்போலவே அவரது முகபாவனைகள் உள்ளன.

Post a Comment