Friday, June 17, 2011

அவன் இவன் : 17th JUNE, 2011 - திரைவிமர்சனம்!


வணக்கம்,

எந்தவொரு படம் பார்ப்பதற்கு முன்பும் அதைப் பற்றிய சில எதிர்பார்ப்புகளை நாமாகவே நம் மனதில் ஏற்படுத்திக்கொண்டே தியேட்டருக்குள் நுழைவோம்! ரஜினி, கமல், விஜய்காந்த், அஜீத், விஜய் போன்றோரின் படங்களுக்கு ஓவ்வொரு விதமாக எதிர்பார்ப்புக்கள் நமக்கு இருக்கும்! அதே போலத் தான் பாலாவின் படங்களுக்கும்!

அடிப்படை மனித உரிமை, பெண்ணுரிமை, ஏன் மிருக உரிமை கூட இவர் படங்களில் காணக் கிடைக்காது! அதிகார வர்க்கத்தினரையும், பிற மதங்களையும் கேவலமாக சாடும் காட்சியமைப்புகள் வலிந்து திணிக்கப்பட்டிருக்கும்! கதை திரைக்கதை போன்ற விஷயங்களை ரொம்பவே மெனக்கெட்டு தேட வேண்டியிருக்கும்! பாலாவின் டோப்படித்த கற்பணையில் உருவான சில குதர்க்கமான குணாதிசயங்கள் கொண்ட கதாபாத்திரங்கள் ஏன் எதற்கென்றே தெரியமால் படத்தில் வளைய வருவார்கள்! எந்த வித நெறிகளுக்கும் இவர்கள் கட்டுப்பட மாடார்கள்! இவர்களின் அனைத்து வசவுகளையும் வாங்கிக் கொண்டு இவர்களை காதலிக்கும், பின்பாதியில் காணாமல் போய் விடும் லூஸு ஹீரோயின்கள்! இடைவேளையிலும், க்ளைமாக்ஸுக்கு முன்பும் கதையோட்டத்திற்கு சம்பந்தமேயில்லாத சில ட்விஸ்ட்டுகள்! ஒன்றுக்கொன்று தொடர்பேயில்லாமல் நகரும் காட்சிகளின் முடிவில் ரத்தக்களரியான க்ளைமாக்ஸ்!

இவை அனைத்தும் அவன் இவனிலும் உண்டு! ஆனால் வழக்கமான IMPACT இதில் குறைவு! ஒரு வேளை பழகி விட்டதோ?!! அல்லது ஏற்கெனவே இவை அனைத்தையும் இவரது முந்தைய படங்களிலேயே பார்த்து விட்டதால் அலுப்பு தட்டி விட்டதோ?!! இல்லை பாலா அடிக்கும் கஞ்சாவில் தான் வீரியம் குறைந்து விட்டதோ?!!

பிதாமகனை அப்படியே லைட்டாக டிங்கரிங், பெயிண்டிங் செய்து அவன் இவன் என்ற பெயரில் வெளியிட்டுள்ளனர்! ஆனால் அதில் சூர்யாவும், விக்ரமும் இருந்தார்கள்! இதிலோ விஷாலும், ஆர்யாவும்! பாவம் விஷால் தான்! தேசிய விருது வாங்கித் தர்றேன்னு ஆசை காட்டி கூட்டி வந்து மோசம் பண்ணியிருக்காங்க! ஒரு வேளை இதில் ஆர்யாவின் உள்குத்து ஏதாச்சும் இருக்கோ?!! “மவனே, நான் இந்தாளுகிட்ட மாட்டிகிட்டு 2 வருஷம் நொந்து நூடுல்ஸானேன்! நீயும் சிக்கி சீரழி!” என்று படப்பிடிப்பின் போது மனதுக்குள் வக்கிரமாக சிரித்துக் கொண்டிருந்தாரோ என்னவோ?!! பாலாவுடன் சேர்ந்து இவரும் சாடிஸ்ட் ஆயிட்டாரோ?!!

வசனம் எஸ்.ரா.! படம் ரிலீஸுக்கு முன் அவர் விட்ட ஸ்டேட்மெண்ட் இது! அவர் சொன்ன மாதிரி படத்தில் ஒன்றுமேயில்லை என்பது வேதனை!
இதுவரை பாலாவின் படங்கள் இருண்மையான உலகை பற்றி மட்டுமே பேசி வந்து இருக்கிறது. ‘அவன் இவன்’ படம் அதிலிருந்து விலகி வாழ்க்கையை கொண்டாடும் நோக்கில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. தவறுகளை தாண்டி வாழ்வை எப்படி கொண்டாட்டமாக வைத்திருப்பது என்பதை படம் சொல்கிறது. ”
இசை யுவன்! சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை! வழக்கமாக பாலா படங்களில் இசைஞானி புகுந்து விளையாடியிருப்பார்! படம் அவரை ரொம்பவே மிஸ் செய்கிறது!

தியேட்டர் டைம்ஸ்:

  • தமிழகம் முழுக்க அனைத்து தியேட்டர்களிலும் திங்கள் வரை ஹவுஸ் ஃபுல்லாம்! குறிப்பாக ஊட்டியில் நான் இந்தப் படத்தை பார்த்த ‘லிபர்டி’ தியேட்டரில் 90% ஃபுல்! வழக்கமாக வெள்ளிக் கிழமைகளில் இந்த தியேட்டரில் 10 பேருடன் புதிய படங்களை பார்க்கும் எனக்கு இது இன்ப அதிர்ச்சி! மழையையும், கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் டூரிஸ்ட்டுகள் கூட்டம் கூட்டமாக குடும்பம் குடும்பமாக வந்து அரங்கை நிறைத்து கண்கொள்ளாக் காட்சி! அந்த அளவிற்கு படத்திற்கு எதிர்பார்ப்பு! 

படம் முடிந்ததும் நானும் வேண்டப்பட்ட விரோதி கிங் விஸ்வாவும் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலின் தொகுப்பு உங்களுக்காக!

கிங் விஸ்வா: அய்யோ! அய்யோ! அய்யோ! அய்யோ! தலைவரே! அந்த க்ளைமாக்ஸை பார்த்தீங்களா?!! தலையில முட்டிகிட்டு செத்துரலாமான்னு இருக்கு!

டாக்டர் செவன்: ஹே! ஹே! ஹே! ஹே!

கிங் விஸ்வா: தலைவரே! நான் கொலை வெறில இருக்கேன்! நீங்க என்னடான்னா சிரிக்கிறீங்க!

டாக்டர் செவன்: அதெல்லாம் என்ன பெரிய கொலை வெறியூட்டும் காட்சி! ஹே! ஹே! ஹே! ஹே!

கிங் விஸ்வா: நீங்க மனுஷனே கிடையாது!

டாக்டர் செவன்: வுடுங்க ஹைனஸ்! நீங்க க்ளைமாக்ஸை பாத்து பயந்துட்டீங்க! ஆனா நானெல்லாம் அதை விட அதிர்ச்சிகரமான காட்சியையெல்லாம் இடைவேளை முடிஞ்சு கொஞ்ச நேரத்துலேயே பாத்துட்டேன்! அதுக்கு முன்னாடி க்ளைமேக்ஸெல்லாம் ஜுஜுபி! ஹே! ஹே! ஹே! ஹே!

தமிழ் சினிமா உலகின் பரிந்துரை:

2/6 - இரண்டு தோட்டாக்கள்!

இது ஒலக சினிமாவும் அல்ல! வழக்கமான தமிழ் சினிமாவும் அல்ல! இது ஒரு டிபிக்கல் பாலா படம்!

பயங்கரவாதியின் பன்ச்:

அவன் இவன் - BALA LIGHT!

பி.கு.:-

படம் பார்க்கப் போகும் முன்னே எதிர்பார்ப்புகள் இருப்பது போல் அதன் விமர்சனத்தை படிக்கும் முன்னும் சில எதிர்பார்ப்புகள் இருக்கும்! இதோ அந்த எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யும் வகையில் ஒரு வாக்கியம்!
விளிம்பு நிலை மனிதர்களின் மிகைப்படுத்தப் பட்ட உணர்ச்சிகளின் பிரதிபலிப்பே பாலாவின் அவன் இவன்!”
அப்பாடா! ‘விளிம்பு நிலை மனிதர்கள்’ என்ற சொற்றொடரை வாக்கியத்தில் அமைத்து அனைவரின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்து பதிவிட்டாகி விட்டது! இனி நான் ‘அவன் இவன்’ பார்த்த பின்னாலும் நிம்மதியாக தூங்குவேன்!

3 comments:

அண்ணன் கா'னா said...

அண்ணன் கா'னாவின் எக்ஸ்பெர்ட் கமென்ட்: நடுநிசி நாய்கள் - குரூர புணர்ச்சி
அவன் இவன் - குரூர உணர்ச்சி.

அண்ணன் கா'னா said...

அண்ணன் கா'னாவின் எக்ஸ்பெர்ட் கமென்ட்: இந்த படத்தை பார்த்துவிட்டு எவனாவது நல்லாயிருக்கு என்று சொன்னால் அந்த ஆள் ஒரு சைக்கோ என்று புரிந்து கொள்ளுங்கள்.

அண்ணன் க'னா said...

//“விளிம்பு நிலை மனிதர்களின் மிகைப்படுத்தப் பட்ட உணர்ச்சிகளின் பிரதிபலிப்பே பாலாவின் அவன் இவன்!”//

ஒரு எழவும் புரியலை. என்னதான் சொல்ல வர்ரீரு? ஒரு வேலை பாலா மாதிரி நீங்களும் ஆயிட்டீங்களோ?

Post a Comment