Thursday, November 15, 2012

அம்மாவின் கைபேசி 13-11-2012 தங்கர் பச்சன் - ஒரு வரலாறு

என்னத்த சொல்லறது , எல்லாம் என் நேரம் .இல்லாட்டி நன்பன்கிற போர்வையில இருந்த படுபாவி சொன்னத நம்பி , "அம்மாவின் கைபேசி" படத்துக்கு போவனா? முந்தநாள் என் பையன சேனல் சர்ப் பண்ணும் போது தங்கரோட பேட்டியோட ஒரு பகுதி காதுல விழுந்தது, அதுல நம்மாளு  " இந்த படத்தை ஒவ்வருவரும் மூணு முறையாவது பாக்கணும் ஒவ்வரு முறையும் ஒரு புது விஷயம் புது கோணத்தில் தெரியும் " அப்படின்னாரு , அத நம்ம்பி ( கவனிக்கவும் எக்ஸ்ட்ரா அழுத்தம்) நானும் பொண்டாட்டி புள்ளைகள கூட்டிகிட்டு கொட்டாய்க்கு போய்ட்டேன். போனப்புறம் தான் தெரிஞ்சது , பயலோட முகமூடி கிழிஞ்சது ( ரைமிங் ). நம்மகிட்ட ஒன்னுமன்னா பழகிக்கிட்டு ,உள்ளுக்குள்ள எவ்வள்ளவு காண்டு வச்சுகிட்டு இருக்கான்கன்னு. எல்லா கெட்டதுலயும் ஒரு நல்லது இருக்கும்கிற கீத வசனம் ( பைபிளா ,இல்ல திருக்குறளா ?) புரிஞ்ச மாதிரி தெரிஞ்சது , ஏன்னா நண்பனுக்குள்ள இருந்த துரோகிய அடையாளம் தெரிஞ்சிகிட்டேன் .ஆனா அந்த லாஜிக் படத்துக்கு செட்டாகல.

படத்துல தங்கர் ஆடுறத பாத்து பயந்துபோன நம்ம பய ,அப்பா வூட்டுக்கு போலாம்பான்னு அழ ஆரம்பிக்க, ஏண்டா ஒன்னால தான டிவில அந்த கருமத்த பாத்துட்டு இங்க வந்து தொலயவேண்டியதா போச்சின்னுட்டு நறுக்குன்னு தலைல ஒன்னு வச்சேன், ஒடனே பயபுள்ள தீபாவளிக்கு அதிரசதுக்கு பதிலா ஆட்டம்பாம முழுங்கின மாதிரி கத்த ஆரம்பிச்சிட்டான். அவன சமாதனபடுத்த ஐஸ் க்ரீம் வாங்கி குடுக்க கேண்டீன் போனா அவன் என்னான்னா ஐநூறு ரூபாய்க்கு சில்லரைஇல்லன்னு அலையவுட்டுட்டான்.

இந்த கடுப்பைஎல்லாம் சேத்துவச்சு மட்டிவுட்ட ராஸ்கோல போன்ல புடிச்சு வாங்கு வாங்குன்னு வாங்கிட்டு கேட்டேன் ஏண்டா , தீவாளிக்கு எங்கிட்ட வாங்கிகுடிச்ச ஓசி குடியோட போத தெளியறதுக்கு முன்னாலேயே இப்புடி மட்டிவுட்டுடியேடான்னு . அலட்டிக்காம அந்த கெரகம் புடிச்சவன் சொல்லறான் , மாப்பள, நீயி பாண்டிச்சேரி போயி ஐநூறு ரூபாய்க்கு ரெண்டு புல் வாங்கிட்டு வந்துட்டு அதகாட்டியே எழுநூத்து அம்பது ரூபா தந்தூரி சிக்கன ஒண்டியா திண்ணுட்ட ,மேக்கொண்டு இதுதான் நியுட்டனோட தியரி, என்னஎப்புடி தாண்டவம் ஒரு சிறந்த படம்னு ஒரு ஒலகமகாபுளுகை புளுகி மாட்டிவுட்டெல்ல, அதோட எதிர்வினை தாம்ப்பு இது அப்புடின்னு லாஜிக்கா மடக்குனான் பாருங்க ,நிர்மலா டீச்சர் இடுப்ப பாத்துட்டு படிக்க மறந்து போன நியுட்டனோட மூணாவது விதி ( அந்த கெரகத்த பாத்தது ஒரு கொலைவெறி ப்ளாஷ்பேக் ) பளிச்சுன்னு ஞாபகம் வந்துடிச்சு}.

சரிடான்னு ,படம் பாத்த மத்த ரெண்டு பயபுள்ளங்கள கூப்பிட்டு , கோட்டு போட்டுக்கிட்டு கேமரா முன்னால வோக்காந்துகிட்டு இருகிறதா நெனச்சிகிட்டு ஒரே வரில படத்த பத்தி சொல்லுங்க ன்னேன், ஒருத்தஞ்ச்சொன்னான்"மிஸ்டு கால்" இன்னொருத்தன் சொன்னான் " பேட்டரி காலி ". படம் முடிஞ்சபொறவு ஒரு எலக்கிய வட்டார தோழர் பொன் போட்டு கேட்டார் படம் எப்புடின்னு நாஞ்சொன்னேன் " தங்கர் பச்சான் ஒரு வரலாறு " அந்த இலக்கியம் நா ஏதோ பாராட்டுன மாதிரி பிரமதம்ன்னு சொல்லிட்டு போன வச்சிடுச்சு.அநேகமா இன்னம் ரெண்டு நாள்ல படம் பாத்துட்டு கொலவெறியோட போன் பண்ணும்னு நெனைக்கிறேன்.

இல்லாட்டி இத்தோட நம்ம கூட்டே வேணாம்ன்னு வெலகிடும் ( நடந்தா நல்லதுதான், இல்லாட்டி எம்புட்டு நேரந்தான் அதோட போன்ல சமகாலம் ,முன்நவீனத்துவம் ,பின்னிரவு நேரங்களின் முன்போழுதுகளில் அப்புடின்னு இலக்கிய சம்பார குடிக்கிறது ( ஏன் இலக்கிய ரசம் இருக்கும் போது சாம்பார் இருக்ககூடாதா?) போன் பேசுறத கேட்டுகிட்டு பக்கத்துல இருந்த பொண்டாட்டி கேட்டா ,"ஏங்க அதுக்கு என்னங்க அர்த்தம்" நாஞ்சொன்னேன் அதுக்கு பேர்தான் " முடிஞ்ச கல்யாணத்துக்கு மோளம் அடிக்கிறதுன்னு " இத படிச்சுட்டு படத்தோட விமர்சனம் என்ன அப்புடின்னு என்ன கேக்கிற புண்ணியவான் தயவுசெஞ்சு, படத்த பாத்துட்டு வந்து உயிரோட இருந்தா, கத என்னன்னு சொல்லி எனக்கு மெயில் போடுங்க.

தமிழ் சினிமா உலகின் பரிந்துரை:

1 Bullet

1/6  ஒரே ஒரு தோட்டா,அதுவும் கூட போனாப் போவுதுன்னுதான்!

சாவியின் பன்ச்: மிஸ்ட் கால - தங்கர் இஸ் ஹிஸ்டரி.

2 comments:

அந்த இலக்கியவியாதி நண்பன் said...

மரண பயத்தை காட்டிட்டியே பரமா , இனிமே உன் பேச்சுக்கே வரமாட்டேன்

"அந்த" இலக்கியவியாதி நண்பன்.

Dino LA said...

அருமை

Post a Comment