Wednesday, May 25, 2011

மைதானம்–தமிழ்ப்படம்–24-05-2011

கடந்த வெள்ளிக்கிழமை அன்று மொத்தம் மூன்று தமிழ் படங்கள் ரிலீஸ் ஆவதாக இருந்தது (எத்தன், கண்டேன் & மைதானம்). இதில் எத்தன் பற்றி ஏற்கனவே ஒரு ரிபோர்ட் வந்து விட்டதால் அதனை அடுத்த வாரம்தான் பார்க்க முடியும் என்பது தெளிவாகிவிட்டது (அதாவது படம் ரிலீஸ் ஆகாது). கண்டேன் படம் பற்றி இண்டஸ்ட்ரி டாக் அது தேறாது என்பதை தெளிவாக்கி விட்டது. ஆனால் மூன்றாவது படத்தை பற்றி யாருக்குமே எதுவும் தெரியவில்லை (மைதானம்).

அதைப்பற்றி தீவிரமாக விசாரிக்கையில் அந்த படத்தின் இயக்குனர் (M.S.சக்திவேல்) பலரிடம் உதவி இயக்குனராக சேர முயற்சி செய்து அது கைகூடாததால் அவரே இந்த படத்தை நேரிடையாக இயக்கியுள்ளதாக தெரியவந்தது. இருந்தாலும் அவர் சிறிது காலம் ஒரு முன்னணி தொலைக்காட்சியின் ரியாலிடி ஷோவில் உதவி இயக்குனராக பணியாற்றியது நமக்கு தெரிந்ததே. ஆனால் இந்த படத்தில் நான்கு உதவி இயக்குனர்களை அவர் நடிக்க வைத்துள்ளது சற்றே பயத்தை கிளப்பியது (ரிமெம்பர் மாத்தி யோசி?).

ஆகையால் இந்த வாரம் தமிழ் படம் எதுவும் பார்க்கப்போவதில்லை என்று முடிவெடுத்து உருப்படியாக ரவி தேஜாவின் தெலுகு படத்தையும் (சொதப்பல்) இரண்டு அற்புதமான ஹிந்தி படங்களையும் (பதிவை எதிர் பாருங்கள்) பார்ப்பது என்று முடிவெடுத்தேன். இதில் பைரேட்ஸ் ஆப் தி கரிபியன் 4 சிறப்பு காட்சியை வேறு வியாழன் அன்றே பார்த்தாகி விட்டதால் கடந்த வெள்ளிக்கிழமை முதல் எந்த படத்தையும் பார்க்காமல் அந்த வாரக்கடைசி ஓடியது (எக்சுவலாக கொஞ்சம் வேலை அதிகம் என்றும் கொள்ளலாம்).

இப்படியாகப்பட்ட சூழலில்தான் என்னுடைய நண்பர் க'னா இன்று சென்னை வந்தார். அலுவலக வேலைகளை முடித்துவிட்டு மாலையில் ஒரு படத்திற்கு போகலாம் என்று முடிவாகியது. ஆனால் நான் தாமதமாக வந்ததால் அந்த படத்திற்கு செல்ல இயலவில்லை. அப்போதுதான் எங்கள் தல யூ’னா மைதானம் என்று ஒரு படம் ரிலீஸ் ஆகியுள்ளது என்ற தகவலை தெரிவித்தார். அந்த படம் சற்று தாமதமாக ஆரம்பிப்பதால் மெலடி தியேட்டருக்கு சென்றால் பார்க்க முடியும் என்று ஊக்கப்படுத்தியதும் அவரே. ஒரு வழியாக தியேட்டருக்கு வந்து படத்தை ஆரம்பத்தில் இருந்து பார்த்தோம்.

மைதானம் - கதை பின்னணி: திருப்பூர் மாவட்டம் கனியூர் (பெயரிலேயே அரசியல்?) என்கிற ஒரு கிராமத்தில் இந்த கதை நடைபெறுவதாக படமாக்கப்பட்டு உள்ளது (ஆனால் உண்மையில் ஷூட்டிங் நடந்தது எல்லாம் உடுமலையில் தான்). அமைதியாக வாழும் ஒரு குடும்பத்தில் தவறான நட்பால் எப்படி குடும்பம் சீர்குலைகிறது என்றும், அதே சமயம் உண்மையான நட்பு எப்படி என்றும் கைகொடுக்கும் எந்தையும் விளக்கும் ஒரு அக்மார்க் சென்டிமென்ட் கதை இது. ரொம்ப நாள் கழித்து அகத்தியன் சார் நடித்துள்ளார். அவர்தான் சம்பந்தப்பட்ட குடும்ப தலைவர். அவரின் மனைவியாக ரீ என்ட்ரி கொடுத்தள்ளார் என் உயர் தோழன் படத்தின் ரமா. இவர்களின் மகனாக உதவி இயக்குனர் சுரேஷ் குருவும், மகளாக ஸ்வாசிகாவும் நடித்துள்ளனர். மகனின் நெருங்கிய தோழர்களாக மற்ற மூன்று உதவி இயக்குனர்கள் (M.A கென்னடி, ஜோதி ராஜ் & சிவா) நடித்து உள்ளனர்.

குடும்பம் (அண்ணன், தங்கை, அப்பா & அம்மா) நண்பர்கள்:Kennedy,Suresh Guru, Jyothi Raj & Siva

தேவதை போன்ற அழகுடன் ஸ்வாசிகா

Maidanam-Tamil-Movie-Photo-Gallery-73 Maidanam-Tamil-Movie-Photo-Gallery-94 Maidanam-Tamil-Movie-Photo-Gallery-61

மைதானம் - திரைப்படம்: படத்தின் நாயகி தன்னுடைய அண்ணனின் மூன்று நண்பர்களில் ஒருவரை காதலிக்கிறார். ஆனால் அந்த நண்பரோ நட்புக்கு துரோகம் செய்ய முடியாது என்று காதலை புறக்கணிக்கிறார். அதே சமயம் வேறொரு நண்பரும் கதாநாயகியையே ஒருதலையாக விரும்ப, நாயகி அவரை மறுக்கிறார். இருந்தாலும் மனதில் காதலுடனே தொடர்கிறார் அந்த நண்பர். இதே சமயம் கதாநாயகிக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் திட்டமிட, நாயகி மறுத்தும் நிச்சயம் செய்யப்படுகிறது - அவரது காதலன் நட்பை மீறி ஒன்றுமே செய்யவில்லை. இந்த சூழலில் திருமண நாள் குறித்தாகிவிட்ட நேரத்தில் நாயகி ஒரு நாள் காணாமல் போகிறார். அவரை தேடும் படலமும் அதன் பின்னணியுமே கதை.

அப்படியே ஒரு கிராமத்தை நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் இயக்குனர். வசனங்களும், காட்சி அமைப்பும், நடிப்பும் முதல் தரம். படத்தின் மற்றுமொரு முக்கியாமான அம்சம் - ஒளி ஓவியம். கேமராமென் யாரென்று தெரிந்தால் அவரை பாராட்ட வேண்டும். அதே சமயம் படத்தின் பல காட்சிகளில் வித்தியாசமான கேமரா ஆங்கிளை வைத்தமைக்கும் பாராட்ட வேண்டும். அதன் பின்னர் லைட்டிங். சொல்லவே வேண்டாம் - டாப் கிளாஸ். கடைசியாக பின்னணி இசையும், பாடல்களும். இது போன்ற படங்களுக்கு பாடல்களே தேவை இல்லை தான். இருந்தாலும் பாடல்கள் ஸ்கோர் செய்கின்றன. குறிப்பாக இரண்டாம் பகுதியில் வரும் அந்த பாடல். பின்னணி இசை பல இடங்களில் கதையின் போக்கை தெளிவாக உணர்த்துகிறது. சபேஷ் முரளி மிஷ்கினிடம் மட்டுமே சிறப்பாக இசை அமைப்பார் என்பதை இந்த படம் மாற்றும்.

தமிழில் நல்ல படங்களே வருவதில்லை என்று சொல்லிக்கொண்டு பன்னாட்டு மொழிப்படங்களை தேடிப்பார்க்கும் நம் நண்பர்கள் கண்டிப்பாக இந்த படத்தை பார்க்கவேண்டும். இவ்வருடத்திய மிகச்சிறந்த படங்களில் இந்த படம் கண்டிப்பாக முதல் மூன்று இடங்களில் வந்துவிடும் என்பதை இங்கு உறுதிபட கூறுகிறேன். அவ்வளவாக விளம்பரத் துணையும், நல்ல தியேட்டர்களின் துணையும், மீடியாவின் துணையும் இல்லாமல் இந்த படம் தள்ளாடுகிறது. நாங்கள் சென்ற அந்த காட்சியில் பால்கனியில் மொத்தமே முப்பது பேர்தான் – This film deserves more. ஆனால் கண்டிப்பாக தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த முதல் முயற்சிகளில் இந்த படம் இடம்பெறும்.

படத்தின் அட்டகாசமான காட்சி: தன்னுடைய மகளிற்கு இவ்வளவு சீக்கிரமே திருமணம் செய்துவிடுகிறோமே என்று அகத்தியன் சார் தன்னுடைய மனைவியிடம் சொல்லி விட்டு பிரேக் டவுன் ஆகும் அந்த காட்சியை ஒவ்வொரு தந்தையும் கண்டிப்பாக பார்க்கவேண்டும். அதிலும் குறிப்பாக அந்த காட்சியில் அவரது முகம் தெரியாமல் கண்ணாடியில் மட்டுமே அவரது ரியாக்ஷன்கள் தெரிய, ச்சே, சான்சே இல்லை. மூவ் ஓவர் அப்பா கேரக்டர் நடிகர்ஸ், இதோ வந்து விட்டார் நடிக்க தெரிந்த ஒருவர். படத்தின் ஹை லைட்டே அகத்தியன் சாரின் நடிப்புதான். ஒரு கிராமத்து தந்தையை அப்படியே கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியுள்ளார் என்று சொன்னால் அது மிகை ஆகாது. இதற்க்கு மேலும் விருது கமிட்டி மற்ற படங்களை பார்க்க வேண்டுமா என்பது கேள்விதான். இந்த வருடத்தின் சிறந்த குணசித்திர நடிகர் விருது இப்போதே முடிவு செய்யப்பட்டு விட்டது. அகத்தியன் சாருக்கு ஒரு ராயல் சல்யூட். இவரது ரியாக்ஷன்களுக்கென்றே மறுபடியும் ஒரு முறை படத்தை பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது.

படத்தின் சுமாரான காட்சி(கள்): படத்தின் முதல் பகுதியில் பல காட்சிகள் மிகவும் ஸ்லோ ஆக நகர்வதாகவே தெரிகிறது. கிட்டத்தட்ட ஒரு மெகா சீரியல் போலவே தோன்றியது. படத்தின் இரண்டாம் பகுதிக்கு இவை வித்திட்டாலும்கூட, இவை சற்றே கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. வேறு ஒரு எடிட்டர் இந்த காட்சிகளை வேறு விதமாக (குறிப்பாக வேகமாக)  மாற்றியிருப்பாரோ என்று நினைக்க வைக்கிறது. அதே சமயம் படத்தின் பட்ஜெட்டும் நினைவில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம். "நேரமும், சக்தியும் இருந்தால் யார் வேண்டுமென்றாலும் சாதிக்கலாம், ஆனால் இவற்றின் துணை இல்லாமலே சாதிப்பவர்கள் தான் வாழ்க்கையில் ஜெயிப்பார்கள்" என்று என் தந்தை சொல்வதைப்போல இந்த படத்தின் இயக்குனர் தன்னுடைய சகதிக்குள் பல நல்ல விஷயங்கள் செய்துள்ளார். ஆகையால் இந்த முதல் பகுதி காட்சிகள் பெரிதாக கவனிக்கப்படாது.

படத்தின் ஹைலைட்: நாயகியை கண்டறிந்த நண்பன் அதனை மற்றவர்களிடம் சொல்லும் காட்சியும், அதன் பின்னர் திரையில் தோன்றும் அந்த பத்து பதினைந்து நிமிடங்கலுமே செலுலாயிட் சித்திரங்கள். இந்த நான்கு உதவி இயக்குநர்களுமே போட்டி போட்டுக்கொண்டு நடித்துள்ளனர். இதற்க்கு மேல் சொன்னால் படத்தின் சுவாரஸ்யம் கெட்டுவிடும் என்பதால் சொல்லவில்லை. குறிப்பாக நாயகியின் அண்ணன் பாத்திரத்தில் இருக்கும் நடிகர். இந்த பாத்திரத்தை இவரைவிட வேறு யாரும் இந்த அளவிற்கு பிரம்மாதமாக செய்யவே முடியாது என்று சவால் விடும் அளவிற்கு நடித்துள்ளார் (இனிமேல் விஜய், அஜித், விக்ரம் போன்றவர்களின் படத்தில் அவர்களின் நண்பராக வர வாய்ப்புகள் கண்டிப்பாக குவியும்). அதிலும் அந்த காதலை மறுக்கும் நண்பரின் பாத்திரம் ஒரு சூப்பர் கேரக்டரைசேஷன் (பழைய இதயம் முரளி போல). அந்த காட்சி வரை தன்னுடைய செட் ஆகாத குரலால் வெறுப்பேற்றி வந்த அந்த நான்காவது உதவி இயக்குனர் கூட (வயதில் முதிர்ந்தவர்) அட்டகாசமாக ஸ்கோர் செய்கிறார். அவரது வசனங்களும், உச்சரிப்பும் அந்த காட்சியில் பின்னுகிறது. 

செகண்ட் ஹைலைட்: படத்தின் கிளைமேக்சில் நாயகியை நண்பர் வீட்டிற்க்கு தெரியாமல் கூட்டிக்கொண்டு சென்று விடுகிறார். அந்த காட்சியில் அந்த நாயகியின் பாத்திரம், அந்த கேரக்டரைசேஷன் மொத்தமாக அடிபட்டு போகிறதே என்று நாங்கள் அனைவரும் நினைத்தோம். ஆனால் இயக்குனர் அங்கே ஒரு திருப்பம் கொண்டு வந்து தன்னுடைய திறமையை நிரூபித்து உள்ளார். ஹாட்ஸ் ஆப் டு யூ, Mr M.S.Shakthivel.

Ticket 2 Ticket 1

தமிழில் பெரும்பாலான இயக்குனர்கள் தங்களின் முதல் படத்தில் ஜெயித்து விடுவார்கள் (அது ஒரு பெரிய கான்செப்ட்). ஆனால் தங்களுடைய முழு திறமையையும் முதல் படத்திலேயே காண்பித்து விட்டதால் இரண்டாம் படத்தில் தடுமாறியவர்கள் பலர். ஆகையால் நான் எப்போதுமே ஒரு இயக்குனரை அவரது இரண்டாம் படத்தை வைத்தே எடை போடுவேன்.  சக்திவேல் சார், இதைப்போல கூட தேவை இல்லை, இதில் பாதி அளவிற்கு இன்னுமொரு படம் கொடுங்கள். தமிழ் திரையுலகம் உங்களை தலையில் வைத்து கொண்டாடும். இதோ இங்கே திரையில் இருக்கும் உங்களின் இந்த பட டிக்கெட்டிற்கு நான் தங்க பிரேம் போட்டு உங்களிடம் கொடுக்கிறேன். வாழ்த்துக்கள் சார். ஆல் தி பெஸ்ட்.

படத்தின் ட்ரைலர்:

தமிழ் சினிமா உலகின் பரிந்துரை: bullets 5/6. ஐந்து தோட்டாக்கள்.இரண்டு கட்டை விரல்கள் மேலே (2 Thumps Up).

கிங்'ஸ் பன்ச்: (Within Limits) விளையாடி இருக்கிறார் இயக்குனர்.

Wednesday, May 18, 2011

ப்ரீஸ்ட் (ஆங்கிலம்) கல்லறை உலகம் - தமிழ் டப்பிங் படம் 13-05-2011

 

நீங்கள் காமிக்ஸ் புத்தகங்களை படிப்பவரா? வித்தியாசமான கதைக்களன் உங்களை கவருமா? பேன்டசி நிறைந்த கதைகள் உங்களுக்கு பிடிக்குமா? ஆம் என்றால் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். மேலே கேட்ட கேள்விகளுக்கு பதில் இல்லை என்றாலும்கூட நீங்கள் தொடர்ந்து படிக்கலாம் - நீங்கள் திரைப்படங்களை விரும்பி பார்ப்பவராக இருந்தால்.

கடந்த வாரம் வெள்ளியன்று நீங்கள் சென்னை ராயப்பேட்டையில் இருக்கும் பைலட் தியேட்டருக்கு வந்திருந்தால் ஒரு கோலாகலமான சூழ்நிலையை கண்டிருக்கலாம். வெகு நாள் கழித்து அன்றுதான் பைலட் தியேட்டரில் கிட்டத்தட்ட அனைத்து காட்சிகளுமே ஹவுஸ்புல். இதற்க்கு வேறொரு காரணமும் இருந்தது. மார்ச் மாதம் முதலே இந்த படத்திற்கு பைலட் தியேட்டரில் மிகவும் பிரம்மாண்டமான ஒரு பேனர் வைத்து இருந்தார்கள். இரண்டு மாதங்களாக படங்களே இல்லாமல் நொந்து போயிருந்த சண்டைப்பட ரசிகர்கள் இதற்காகவே காத்திருந்து படம் ரிலீஸ் ஆனதும் வந்து குவிந்து விட்டனர். இருக்காதா பின்னே, நடுவில் புதிய படங்களே இல்லாமல் மொக்கை படங்களை எல்லாம் நல்ல பிராண்ட் நேமில் ரிலீஸ் செய்து (டைட்டானிக் 3) மக்களை நோகடிதுக்கொண்டு இருந்தவேளையில் தீபாவளிக்கு வந்த ரஜினி படம்போல வந்துள்ளதே இந்த ப்ரீஸ்ட் படம்.

அதுவுமில்லாமல் இனிமேல் அடுத்த இரண்டு மாதங்களும் பைலட் தியேட்டர் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். இந்த வாரம் பைரேட்ஸ் ஆப் தி கரிபியன் 4, பின்னர் அடுத்த மாதம் எக்ஸ் மென் பர்ஸ்ட் கிளாஸ் என்று தொடர்ந்து பல படங்கள் வரவிருக்கின்றன.

ப்ரீஸ்ட் - கதை பின்னணி: ஆங்கிலேயரின் வழக்கப்படி நாம் சித்திரக்கதைகளை காமிக்ஸ் என்று அழைக்கிறோம். அதனையே சந்தையாக்கும் நோக்கில் கிராபிக் நாவல் என்றும் விற்பனை செய்கிறோம். அதனைப்போலவே ஜப்பானியர்கள் தங்களுடைய சித்திரக்கதைகளை மங்கா என்று அழைக்கிறார்கள் (நன்றாக கவனிக்கவும், மாங்கா அல்ல - மங்கா தான்). தமிழிலும் சில மங்காக்கள் வந்துள்ளன (உபயம்- திரு எஸ்.விஜயன், லயன் காமிக்ஸ்). இதனைப்போலவே கொரியர்கள் தங்களுடைய சித்திரக்கதைகளை மன்ஹ்வா (Manhwa) என்று குறிப்பிடுகிறார்கள். இப்படிப்பட்ட ஒரு மன்ஹ்வா கதைதொடர்தான் ப்ரீஸ்ட்.

என்னை விட சரியாக ஆறு வயது மூத்தவரான யங் மின் வூ (அட, அவருடைய பிறந்த தேதியும், என்னுடைய பிறந்த தேதியும் ஒன்றுதான் - வருடங்கள் தான் வேறு வேறு) தான் இந்த கதையை எழுதியவர். பழைய காலத்து கவ் பாய் கதைகளின் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும் வகையில் அமைக்கப்பட்ட இந்த கதையானது உண்மையில் ஒரு விடியோ கேமில் இருந்து இன்ஸ்பையர் ஆனதே. இதனை இந்த கதாசிரியரும் ஒப்புக்கொண்டு இருக்கிறார்.

இந்த காமிக்ஸ் தொடரைப்பற்றி நண்பர் கனவுகளின் காதலன் அவர்கள் ஏற்கனவே ஒரு பதிவு எழுதி இருக்கிறார். பதினான்கு வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இந்த கதைத்தொடர் இதுவரையில் பதினாறு பாகங்கள் வந்து பெருவெற்றி பெற்றது. இதன் வெற்றியை தொடர்ந்து ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. சுமார் ஏழு ஆண்டுகளாக இந்த கதைதொடரை திரைவடிவில் கொணர பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இப்போதுதான் அது ஒரு வழியாக நிறைவேறியுள்ளது.

வேறொரு உலகில் மனிதர்களுக்கும், இரத்தக் காட்டேரிகளுக்கும் நடைபெறும் யுத்தமே இந்த கதைத்தொடரின் பின்னணி. கதைக்களனை அப்படியே கவ்பாய்கள் நிறைந்த வைல்ட் வெஸ்ட் உலகுக்கு அவதானம் செய்யுங்கள். கதையின் டோன் அப்படியே இருக்கும். இந்த கதையில் வரும் ப்ரீஸ்ட்'டுகளை சட்டப்பரிபாலனம் செய்யும் ஷெரிப் போலவும் கொள்ளலாம். கதைப்படி இரத்தக்காட்டேரிகளை அழிக்க திருச்சபை இளம்வயதிலேயே பல சிறுவர்களை சிறப்பான பயிற்சி அளித்து அவர்களை வெல்லமுடியாத மாவீரர்களாக உருவாக்கி இரத்தக்காட்டேரிகளை அழிக்க அனுப்புகிறது. இந்த சிறப்பு பயிற்சி பெற்றவர்கள் நெற்றியில் சிலுவை குறியீடு பச்சை குத்தப்பட்டிருக்கும். இவர்கள் ப்ரீஸ்ட் என்று அழைக்கப்படுவார்கள். பெண்பாலர்கள்  ப்ரீஸ்ட்டஸ் என்று அழைக்கப்படுவார்கள். இவர்கள் அனைவரும் உலக இச்சைகளை துறந்தவர்கள். கிட்டத்தட்ட புனிதப்போரில் வந்த க்ருசேடர்ஸ் மாதிரித்தான் இவர்களும்.

கல்லறை உலகம் - திரைப்படம்: கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் டெவலப்மென்ட் ஹெல் என்று ஹாலிவுட்டில் சொல்லப்படும் இடைப்பட்ட காலத்திலேயே இந்த படம் இருந்தது. அதாவது கதை ரெடி, ஸ்க்ரிப்ட் ரெடி, புரொடியூசர் ரெடி ஆனால் படமாக்கல் மட்டும் அப்படியே இருக்கும். அப்படி இருந்த காலங்களில் பல இயக்குனர்கள், ஹீரோக்கள் மாறி பின்னர் சென்ற ஆண்டு வெளிவந்த லீஜியன் பட இயக்குனர் ஸ்காட் ஸ்டிவர்ட் அவர்களின் இயக்கத்தில் அவரின் பேவரிட் ஹீரோ பால் பெட்டானியுடன் இந்த படம் படமாக்கப்பட்டது.

படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்தது 2009ல். அப்போது வெறும் 2-Dயில் படமாக்கப்பட்ட இந்த படம் சென்ற ஆண்டே ரிலீஸ் ஆகவேண்டியது. ஆனால் அவதார் மற்றும் பல படங்களின் மகத்தான வெற்றியை கண்டு இந்த படத்தையும் 3-Dக்கு மாற்ற முடிவெடுத்தனர். அதன் விளைவு? இன்னும் ஆறுமாத தாமதம். ஒரு வழியாக இந்த வெள்ளியன்று 3-Dயில் இந்த படம் திரைக்கு வந்தது (பைலட் தியேட்டரில் 2-D தான்).

கல்லறை உலகம் - கதை பின்புலம்: கதை நடப்பது வேறொரு மாற்று உலகில். மனிதர்களுக்கும், இரத்தக்காட்டேரிகளுக்கும் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த புனிதப்போர் ஒரு வழியாக 'முடிவு' பெற்ற நிலையில் அந்த போரில் பங்கேற்ற ப்ரீஸ்ட்டுகளின் தேவை இனிமேல் திருச்சபைக்கு தேவைப்படவில்லை. எஞ்சியுள்ள மனிதர்கள் அனைவரும் ஒரு மிகப்பெரிய நகரத்தில் மிகுந்த பாதுகாப்புடன் திருச்சபையின் கண்ட்ரோலில் வாழ்கின்றனர். அந்த நகரத்திற்கு கூரை வேயப்பட்டு அனைத்து வகையிலும் மிகுந்த பாதுகாப்புடன் உள்ளது. மக்கள் அனைவரையும் திருச்சபை "இரத்தக்காட்டேரிகள் இறந்து விட்டார்கள்" என்ற நம்பிக்கையில் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்கிறது.  முன்னாள் போராளிகள் அனைவரும் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். திருச்சபைக்கு வெளியேயும் மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் திருச்சபையின் கண்ட்ரோலில் இல்லாமல் தனித்து வாழ்கின்றனர். இவர்களை பாதுகாக்க சட்ட அதிகாரிகளாக அந்தந்த ஊர் ஷெரிப்கள் இருக்கின்றனர்.

ப்ரீஸ்ட் - முதல் பாகம்: படத்தின் ஆரம்பத்தில் சில காட்சிகள் மட்டுமே ஒரிஜினல் காமிக்ஸ் காட்சிகளை உபயோகப்படுத்தி இருக்கிறார்கள். அந்த காட்சிகள் பல ஆண்டுகளாக நடந்து வரும் போரைப்பற்றி உள்ளது. பின்னர் அனிமேஷனில் இருந்து ரியல்மோஷன் பிச்சர் ஆரம்பிக்கும்போது ஊருக்கு வெளியே தனித்து வசிக்கும் ஒரு குடும்பம் இரதக்காட்டேரிகளால் தாக்கப்படுகிறது. அந்த குடும்பத்தின் உறுப்பினர்கள் தாக்கப்பட, ஒரு இளம்பெண்ணை மட்டும் கதையின் எதிர்நாயகன் கருப்பு தொப்பி (பிளாக் ஹாட்) கடத்தி செல்கிறான். தகவல் அறிந்த அந்த ஊரின் ஷெரிப் மற்றும் அந்த பெண்ணின் (ஒருதலைக்)காதலன் உடனடியாக அந்த பெண்ணின் தந்தியின் வேண்டுகோளுக்கிணங்க நம்ம ஹீரோவை தேடி பாதுகாப்பில் இருக்கும் திருச்சபை நகருக்கு வருகிறான். தகவல் அறிந்த ப்ரீஸ்ட் தலைமை பாதிரியிடம் நகரைவிட்டு செல்ல வேண்டுகோள் விடுக்கிறான். அப்படி அனுமதித்தால், இரத்தக்காட்டேரிகள் இருப்பது உண்மையாகிவிடும் என்று பயந்த பாதிரி அனுமதி மறுக்கிறார்.

இவ்வளவு நாட்களாக தன்னை ஒரு அடிமை போல நடத்திய திருச்சபை, தன்னுடைய ஒரு கோரிக்கையையும் செவிமடுக்காததைக்கண்டு பொங்கியெழும் ஹீரோ, உடனடியாக பாதுகாவலர்களை துவம்சம் செய்துவிட்டு தன்னுடைய அண்ணன் மகளைதேடி ஷெரிப் உடன் பயணத்தை ஆரம்பிக்கிறார். ஹீரோ தப்பியதை அடுத்து, திருச்சபை நான்கு போராளிகளை அனுப்புகிறது (அதில் ஒரு சைனாக்காரர், ஒருவர் பெண் - ப்ரீஸ்ட்டஸ்). இவர்கள் தங்கள் பயணத்தை ஆரம்பிக்கும்போது கடத்தப்பட்ட அந்த பெண்ணிடம் கருப்பு தொப்பி "உன்னை கடதியதே உன்னுடைய மாமாவாகிய அந்த ப்ரீஸ்ட்'ஐ பிடிக்கத்தான்" என்று கூறுகிறார். அதில் இருந்து துடி துடிப்பான ஒரு பயணம் ஆரம்பிக்கிறது.

உண்மையில் ப்ரீஸ்ட் என்பது யார்? அவனுக்கு அடிக்கடி வரும் அந்த கனவின் பின்னணி என்ன? அவனுக்கும் கருப்பு தொப்பிக்கும் இருக்கும் உறவு என்ன? கருப்பு தொப்பி ஏன் இப்படி ப்ரீஸ்ட் மீதும், திருச்சபை மீதும் கொலைவெறி கொண்டு அலைகிறான்? அந்த பெண் யார்? இவர்களை தேடி வந்த அந்த நான்கு போராளிகளின் கதி என்ன? ஒவ்வொரு ஊரிலும் நாசம் விளைவித்து விட்டு கருப்பு தொப்பியின் கும்பல் எப்படி சூரிய ஒளி வருவதற்குள் எப்படி தப்பிக்கிறார்கள்? மற்ற இரத்தக்காட்டேரிகளை பாதிக்கும் சூரிய ஒளி கருப்பு தொப்பியை மட்டும் ஒன்றும் செய்யாதது ஏன்? இருள் நிறைந்த மரணக்குகையில் தங்கியிருக்கும் இரத்தக்காட்டேரிகளின் மகாராணியின் ரகசியம் என்ன?  உண்மையில் திருச்சபையை எதிர்ப்பது அந்த ஆண்டவனையே எதிர்ப்பது போலவா? (கொய்யால, படத்துல அப்படிதான் வசனங்கள் வருதுங்கோவ்).

இவற்றை எல்லாம் வெள்ளித்திரையில் காண்க. ப்ரீஸ்ட் திரைப்படம் மிஸ் செய்யக்கூடாத திரைப்படங்களில் ஒன்று அல்ல. அதே சமயம் மோசமான திரைப்படமும் அல்ல. கண்டிப்பாக நேரமிருப்பின் சண்டைப்படபிரியர்கள் கண்டுகளிக்க வேண்டிய படமே கல்லறை உலகம்.

படத்தின் அட்டகாசமான காட்சி: ஒரு மிகப்பெரிய குகையில் இரத்தக்காட்டேரிகளை தேடியவாறு ப்ரீஸ்ட்டும், ஷெரிப்பும் செல்ல அங்கே ப்ரீஸ்ட்டஸ் ஏற்கனவே இவர்களுக்காக காத்திருக்கிறார். இவர்கள் இருவரும் ஷெரிப்'ஐ வெளியே காத்திருக்க சொல்லிவிட்டு குகையின் உள்ளே நுழைகிறார்கள். அங்கே இராட்சத காட்டேரி ஒரு இவர்கள் மீது பாய்கிறது. இருவரும் இணைந்து அந்த மிருகத்தை கொல்லும் அந்த செட்-பீஸ் காட்சி அப்படியே "கிரவ்ச்சிங் டைகர், ஹிட்டன் டிராகன்" படங்களின் சண்டைகளுக்கு ஒரு மகத்தான ட்ரிப்பியூட்.

படத்தின் மொக்கை (ஆகிவிட்ட) ஒரு காட்சி: ஒரு நகரம். இரயில் பாதையால் மற்ற ஊர்களுடன் இணைக்கப்பட்டு இருந்தாலும் தனித்தே இருக்கிறது. அந்த ஊரை அழிக்க கருப்பு தொப்பி தன்னுடைய படையுடன் வருகிறான். அவர்கள் ஸ்டைலாக இரயிலில் வந்து இறங்குவது, ஸ்டேஷன் மாஸ்டர் மிரள்வது என்று பில்ட்-அப் காட்சிகள் அப்படியே செர்ஜியோ லியோனியின் ஒன்ஸ் அபான் எ டைம் இன் தி வெஸ்ட் படத்தின் காட்சிகளை நினைவுபடுத்தும். ப்ரீஸ்ட் படத்தில் இந்த காட்சி அட்டகாசமான மியூசிக்குடன் செம பில்ட்-அப்புடன் ஆரம்பிக்கும். ஆனால் அந்த காட்சியை அப்படியே கட் செய்து, அவர்கள் அனைவரையும் அழிந்த பிறகு இருக்கும் காட்சிக்கு இயக்குனர் நம்மை கொண்டு செல்கிறார். ஒரு வேலை, அந்த அழிவு காட்சிகளை திரையில் காண்பிக்க வேண்டாமென்று நினைத்திருக்கலாம். ஆனால் அவ்வளவு பில்ட்-அப்பிற்கு பிறகு புஸ்ஸ்ஸ் என்று இருக்கிறது அந்த ஸீன். யு மிஸ்ட் இட், டைரக்டர். 

படத்தின் ஹை-லைட்: கண்டிப்பாக அந்த கிளைமேக்ஸ் டிரெயின் சண்டைக்காட்சிதான். சென்ற வாரம் வந்த பாஸ்ட் & பியூரியஸ் 5 படத்தில் ஆரம்ப காட்சியே ஒரு டிரெயின் சேசிங்தான். அந்த அளவிற்கு இல்லையென்றாலும் இந்த படத்தில் ஓரளவுக்கு நன்றாகவே இருக்கிறது அந்த இரயில் சண்டைக்காட்சி. ஓடும் ரெயிலில் கருப்பு தொப்பியும் அவனது கும்பலும் பயணிக்க, ரெயிலின் பின்பக்கத்தில் இருந்து ஷெரிப் நுழைந்து அந்த பெண்ணை தேடிக்கொண்டு வர, நடுவில் இருந்து ப்ரீஸ்ட் தேட, முன்னே சென்று வெடிகுண்டுகளை செட் செய்கிறார் ப்ரீஸ்ட்டஸ். அப்புறம் நடக்கும் காட்சிகள் தான் கிளைமேக்ஸ்.

 

தமிழ் சினிமா உலகின் பரிந்துரை: 2 bullets  2/6. இரண்டு தோட்டாக்கள்.

கிங்'ஸ் பன்ச்: ப்ரீஸ்ட்டுக்கு தேவை பாவ மன்னிப்பு.